| 1 | தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். | 1நாளா 29:28 ஆதி 25:8 ஆதி 35:29 1இரா 1:1 யோபு 5:26 |
| 2 | இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான். | 1நாளா 13:1 1நாளா 28:1 யோசு 23:2 யோசு 24:1 2நாளா 34:29 2நாளா 34:30 |
| 3 | அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம். | எண் 4:2 எண் 4:3 எண் 4:23 எண் 4:30 எண் 4:35 எண் 4:43 எண் 4:47 |
| 4 | அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும், | 1நாளா 23:28-32 1நாளா 6:48 1நாளா 9:28-32 1நாளா 26:20-27 |
| 5 | நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதி செய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, | 1நாளா 9:17-27 1நாளா 15:23 1நாளா 15:24 1நாளா 16:38 1நாளா 26:1-12 2நாளா 8:14 2நாளா 35:15 எஸ்றா 7:7 நெகே 7:73 |
| 6 | அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான். | 2நாளா 8:14 2நாளா 29:25 2நாளா 31:2 2நாளா 35:10 எஸ்றா 6:18 |
| 7 | கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள். | 1நாளா 6:17-20 1நாளா 15:7 1நாளா 26:21 |
| 8 | லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான். | 1நாளா 15:18 1நாளா 15:20 1நாளா 15:21 |
| 9 | சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள். |
| 10 | யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள். |
| 11 | யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள். |
| 12 | கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர். | 1நாளா 6:2 யாத் 6:18 எண் 3:27 எண் 26:58 |
| 13 | அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள். | 1நாளா 6:3 யாத் 6:20 எண் 3:27 எண் 26:59 |
| 14 | தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள். | உபா 33:1 சங் 90:1 |
| 15 | மோசேயின் குமாரர், கெர்சோம் எலியேசர் என்பவர்கள். | யாத் 2:22 யாத் 4:20 யாத் 18:3 யாத் 18:4 |
| 16 | கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான். | 1நாளா 24:20 1நாளா 25:20 |
| 17 | எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள். | 1நாளா 26:25 |
| 18 | இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான். | 1நாளா 24:22 |
| 19 | எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம். | 1நாளா 23:12 1நாளா 15:9 1நாளா 24:23 |
| 20 | ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா. |
| 21 | மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள். | 1நாளா 23:6 1நாளா 6:20 1நாளா 6:30 1நாளா 24:26-30 |
| 22 | எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள். | 1நாளா 24:28 |
| 23 | மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். | 1நாளா 24:30 |
| 24 | தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். | எண் 10:17 எண் 10:21 |
| 25 | இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும், | 1நாளா 22:18 2சாமு 7:1 2சாமு 7:11 |
| 26 | இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத் தேவையில்லை என்றும், | எண் 4:5 எண் 4:49 எண் 7:9 |
| 27 | தாவீது அவர்களைக் குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள். | 1நாளா 23:3 1நாளா 23:24 2சாமு 23:1 சங் 72:20 |
| 28 | அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும், | 1நாளா 18:17 நெகே 11:24 |
| 29 | சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும், | 1நாளா 9:31 1நாளா 9:32 யாத் 25:30 லேவி 24:5-9 1இரா 7:48 2நாளா 13:11 2நாளா 29:18 நெகே 10:33 மத் 12:4 எபிரெ 9:2 |
| 30 | நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும், | 1நாளா 6:31-33 1நாளா 9:33 1நாளா 16:37-42 1நாளா 25:1-7 2நாளா 29:25-28 2நாளா 31:2 எஸ்றா 3:10 எஸ்றா 3:11 சங் 135:1-3 சங் 135:19-3 சங் 135:20-3 சங் 137:2-4 வெளிப் 5:8-14 வெளிப் 14:3 |
| 31 | இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும், | லேவி 23:24 லேவி 23:39 எண் 10:10 சங் 81:1-4 ஏசா 1:13 ஏசா 1:14 |
| 32 | ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாயிருந்தது. | 1நாளா 9:27 எண் 1:53 1இரா 8:4 |