| 1 | கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். | மத் 11:14 மத் 16:14 மத் 27:47 மத் 27:49 லூக் 1:17 லூக் 4:25 லூக் 4:26 லூக் 9:30 லூக் 9:33 லூக் 9:54 யோவா 1:21 யோவா 1:25 ரோம 11:2 |
| 2 | பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: | 1இரா 12:22 1நாளா 17:3 எரே 7:1 எரே 11:1 எரே 18:1 ஓசி 1:1 ஓசி 1:2 |
| 3 | நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. | 1இரா 22:25 சங் 31:20 சங் 83:3 எரே 36:19 எரே 36:26 யோவா 8:59 அப் 17:14 எபிரெ 11:38 வெளிப் 12:6 வெளிப் 12:14 |
| 4 | அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். | 1இரா 17:9 1இரா 19:5-8 எண் 20:8 யோபு 34:29 யோபு 38:8-13 யோபு 38:41-13 சங் 33:8 சங் 33:9 சங் 147:9 ஆமோ 9:3 ஆமோ 9:4 மத் 4:4 மத் 4:11 |
| 5 | அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். | 1இரா 19:9 நீதி 3:5 மத் 16:24 யோவா 15:14 |
| 6 | காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். | யாத் 16:35 எண் 11:23 நியா 14:14 நியா 15:18 நியா 15:19 சங் 34:9 சங் 34:10 சங் 37:3 சங் 37:19 சங் 78:15 சங் 78:16 சங் 78:23 சங் 78:24 ஏசா 33:16 எரே 37:21 எரே 40:4 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 மத் 6:31-33 மத் 14:19-21 மத் 19:26 லூக் 22:35 எபிரெ 6:18 எபிரெ 13:5 எபிரெ 13:6 |
| 7 | தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. | ஏசா 40:30 ஏசா 40:31 ஏசா 54:10 |
| 8 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: | 1இரா 17:2 ஆதி 22:14 ஏசா 41:17 எபிரெ 13:6 |
| 9 | நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார். | ஒபதி 1:20 லூக் 4:26 |
| 10 | அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். | ஆதி 21:15 ஆதி 24:17 யோவா 4:7 2கொரி 11:27 எபிரெ 11:37 |
| 11 | கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். | ஆதி 24:18 ஆதி 24:19 மத் 10:42 மத் 25:35-40 எபிரெ 13:2 |
| 12 | அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். | 1இரா 17:1 1சாமு 14:39 1சாமு 14:45 1சாமு 20:3 1சாமு 20:21 1சாமு 25:26 1சாமு 26:10 2சாமு 15:21 எரே 4:2 எரே 5:2 |
| 13 | அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். | யாத் 14:13 2இரா 6:16 2நாளா 20:17 ஏசா 41:10 ஏசா 41:13 மத் 28:5 அப் 27:24 |
| 14 | கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 2இரா 3:16 2இரா 7:1 2இரா 9:6 |
| 15 | அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். | ஆதி 6:22 ஆதி 12:4 ஆதி 22:3 2நாளா 20:20 மத் 15:28 மாற் 12:43 யோவா 11:40 ரோம 4:19 ரோம 4:20 எபிரெ 11:7 எபிரெ 11:8 எபிரெ 11:17 |
| 16 | கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. | மத் 9:28-30 மத் 19:26 லூக் 1:37 லூக் 1:45 யோவா 4:50 யோவா 4:51 |
| 17 | இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. | ஆதி 22:1 ஆதி 22:2 2இரா 4:18-20 சகரி 12:10 யோவா 11:3 யோவா 11:4 யோவா 11:14 யாக் 1:2-4 யாக் 1:12-4 1பேது 1:7 1பேது 4:12 |
| 18 | அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள். | 2சாமு 16:10 2சாமு 19:22 2இரா 3:13 2நாளா 35:21 லூக் 4:34 லூக் 5:8 லூக் 8:28 யோவா 2:4 |
| 19 | அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து: | 2இரா 4:10 2இரா 4:21 2இரா 4:32 அப் 9:37 |
| 20 | என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு; | 1இரா 18:36 1இரா 18:37 யாத் 17:4 1சாமு 7:8 1சாமு 7:9 2இரா 19:4 2இரா 19:15 சங் 99:6 மத் 21:22 யாக் 5:15-18 |
| 21 | அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். | 2இரா 4:33-35 அப் 10:10 |
| 22 | கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். | உபா 32:39 1சாமு 2:6 2இரா 13:21 லூக் 8:54 யோவா 5:28 யோவா 5:29 யோவா 11:43 அப் 20:12 ரோம 14:9 வெளிப் 11:11 |
| 23 | அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான். | 2இரா 4:36 2இரா 4:37 லூக் 7:15 அப் 9:41 எபிரெ 11:35 |
| 24 | அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள். | யோவா 2:11 யோவா 3:2 யோவா 4:42-48 யோவா 11:15 யோவா 11:42 யோவா 15:24 யோவா 16:30 |