| 1 | யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, | 1இரா 12:22 2இரா 23:17 2நாளா 9:29 |
| 2 | அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; | உபா 32:1 ஏசா 1:2 ஏசா 58:1 எரே 22:29 எசே 36:1 எசே 36:4 எசே 38:4 லூக் 19:40 |
| 3 | அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோகும்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான். | யாத் 4:3-5 யாத் 4:8-5 யாத் 4:9-5 யாத் 7:10 உபா 13:1-3 1சாமு 2:34 2இரா 20:8 ஏசா 7:11-14 ஏசா 38:6-8 ஏசா 38:22-8 எரே 44:29 மத் 12:38-40 யோவா 2:18 1கொரி 1:22 |
| 4 | பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. | 2நாளா 16:10 2நாளா 18:25-27 2நாளா 25:15 2நாளா 25:16 சங் 105:15 எரே 20:2-4 எரே 26:8-11 எரே 26:20-23 எரே 38:4-6 ஆமோ 7:10-17 மத் 25:40 மத் 26:57 மாற் 14:44-46 யோவா 13:20 அப் 6:12-14 |
| 5 | தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று. | 1இரா 13:3 1இரா 22:28 1இரா 22:35 யாத் 9:18-25 எண் 16:23-35 உபா 18:22 எரே 28:16 எரே 28:17 மாற் 16:20 அப் 5:1-10 |
| 6 | அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது. | யாத் 8:8 யாத் 8:28 யாத் 9:28 யாத் 10:17 யாத் 12:32 எண் 21:7 1சாமு 12:19 எரே 37:3 எரே 42:2-4 அப் 8:24 யாக் 5:16 வெளிப் 3:9 |
| 7 | அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான். | ஆதி 18:5 நியா 13:15 நியா 19:21 |
| 8 | தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. | எண் 22:18 எண் 24:13 யாத் 5:3 யாத் 5:6 யாத் 7:2 மாற் 6:23 |
| 9 | ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, | 1இரா 13:1 1இரா 13:21 1இரா 13:22 1சாமு 15:22 யோபு 23:12 யோவா 13:17 யோவா 15:9 யோவா 15:10 யோவா 15:14 |
| 10 | அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான். |
| 11 | கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள். | 1இரா 13:20 1இரா 13:21 எண் 23:4 எண் 23:5 எண் 24:2 1சாமு 10:11 2இரா 23:18 எசே 13:2 எசே 13:16 மத் 7:22 2பேது 2:16 |
| 12 | அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால், |
| 13 | அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி, | 1இரா 13:27 எண் 22:21 நியா 5:10 நியா 10:4 2சாமு 19:26 |
| 14 | தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான். | 1இரா 19:4 யோவா 4:6 யோவா 4:34 1கொரி 4:11 1கொரி 4:12 2கொரி 11:27 பிலிப் 4:12 பிலிப் 4:13 |
| 15 | அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான். |
| 16 | அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். | 1இரா 13:8 1இரா 13:9 ஆதி 3:1-3 எண் 22:13 எண் 22:19 மத் 4:10 மத் 16:23 |
| 17 | ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான். | 1இரா 13:1 1இரா 20:35 1தெச 4:15 |
| 18 | அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான். | எண் 22:35 நியா 6:11 நியா 6:12 நியா 13:3 |
| 19 | அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான். | 1இரா 13:9 ஆதி 3:6 உபா 13:1 உபா 13:3 உபா 13:5 உபா 18:20 அப் 4:19 2பேது 2:18 2பேது 2:19 |
| 20 | அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால், | எண் 23:5 எண் 23:16 எண் 24:4 எண் 24:16-24 மத் 7:22 யோவா 11:51 1கொரி 13:2 |
| 21 | அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி, | 1இரா 13:17 ஆதி 3:7 எஸ்தர் 6:13 எரே 2:19 கலா 1:8 கலா 1:9 |
| 22 | அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். | 1இரா 13:30 1இரா 14:13 2நாளா 21:19 2நாளா 21:20 ஏசா 14:18-20 எரே 22:18 எரே 22:19 |
| 23 | அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான். |
| 24 | அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது. | 1இரா 20:36 2இரா 2:24 நீதி 22:13 நீதி 26:13 ஆமோ 5:19 1கொரி 11:31 1கொரி 11:32 1பேது 4:17 1பேது 4:18 |
| 25 | அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். |
| 26 | அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி, | லேவி 10:3 2சாமு 12:10 2சாமு 12:14 சங் 119:120 நீதி 11:31 எசே 9:6 1கொரி 11:30 எபிரெ 12:28 எபிரெ 12:29 1பேது 4:17 |
| 27 | தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள். |
| 28 | அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை. | 1இரா 17:4 1இரா 17:6 லேவி 10:2 லேவி 10:5 யோபு 38:11 சங் 148:7 சங் 148:8 எரே 5:22 எரே 5:23 தானி 3:22 தானி 3:27 தானி 3:28 தானி 6:22-24 அப் 16:26 எபிரெ 11:33 எபிரெ 11:34 |
| 29 | அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து, |
| 30 | அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள். | 1இரா 14:13 எரே 22:18 அப் 8:2 |
| 31 | அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள். | எண் 23:10 சங் 26:9 பிரச 8:10 லூக் 16:22 லூக் 16:23 |
| 32 | அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான். | 1இரா 13:2 2இரா 23:16-19 |
| 33 | இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள். | 1இரா 12:31-33 2நாளா 11:15 2நாளா 13:9 ஆமோ 6:11 |
| 34 | யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று. | 1இரா 12:30 2இரா 10:31 2இரா 17:21 |