<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
	<atom:link href="https://www.truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/erv/19/84.raw" rel="self" type="application/rss+xml" />
	<image>
	  <url>https://www.truthintamil.com/media/com_zefaniabible/images/bible_100.jpg</url>
	  <title>ERV</title>
	  <link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/84-chapter.html?ord=040526</link>
	</image>
	<title>ERV</title>
	<link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/84-chapter.html?ord=040526</link>
	<generator>Zefania Bible</generator>
	<language>en-gb</language>
	<copyright>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</copyright>
	<description>சங்கீதம் அத்தியாயம் 84</description>
	<item>
		<title>சங்கீதம் அத்தியாயம் 84</title>
		<link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/84-chapter.html?ord=040526</link>
		<guid>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/84-chapter.html?ord=040526</guid>
		<pubDate>Sun, 05 Apr 2026 15:51:29 +0000</pubDate>
		<description>
				சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
				கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது. ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன். என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
				என் அரசரே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு. உமது பலிபீடத்தருகே அப் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
				உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
				தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
				அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள். தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார். இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
				தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில் ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.
				சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
				தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும். நீர் தேர்ந்தெடுத்த அரசன் மீது இரக்கமாயிரும்.
				வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது. எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
				கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர். தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
				சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.
		</description>
	</item>
</channel>
</rss>