<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>ERV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 76</subtitle>
  <link href="https://www.truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/erv/19/76/atom.raw" rel="self" />
  <link href="https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/76-chapter.html?ord=040426" />
  <id>tag:/www.truthintamil.com,2026-04-04:20260404</id>
  <updated>2026-04-04T11:44:06+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 76</title>
          <link href="https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/76-chapter.html?ord=040426" />
          <id>tag:/www.truthintamil.com,2026-04-04:20260404</id>
          <updated>2026-04-04T11:44:06+00:00</updated>
          <summary>
				யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள். இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
				தேவனுடைய ஆலயம் சாலேமில் இருக்கிறது. தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
				அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள், மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
				தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
				அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
				யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
				தேவனே, நீர் பயங்கரமானவர்! நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
				கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார். தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
				பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார். பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
				தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள். நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும். தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
				ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள். இப்போது, வாக்குறுதிப் பண்ணினீர்கள். இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள். எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள். அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
				தேவன் பெருந்தலைவர்களைத் தோற் கடிக்கிறார். பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/www.truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>