<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
	<atom:link href="https://www.truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/erv/19/75.raw" rel="self" type="application/rss+xml" />
	<image>
	  <url>https://www.truthintamil.com/media/com_zefaniabible/images/bible_100.jpg</url>
	  <title>ERV</title>
	  <link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/75-chapter.html?ord=040426</link>
	</image>
	<title>ERV</title>
	<link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/75-chapter.html?ord=040426</link>
	<generator>Zefania Bible</generator>
	<language>en-gb</language>
	<copyright>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</copyright>
	<description>சங்கீதம் அத்தியாயம் 75</description>
	<item>
		<title>சங்கீதம் அத்தியாயம் 75</title>
		<link>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/75-chapter.html?ord=040426</link>
		<guid>https://www.truthintamil.com/tamil-bible/read-bible/standard/erv/19-சங்கீதம்/75-chapter.html?ord=040426</guid>
		<pubDate>Sat, 04 Apr 2026 10:12:51 +0000</pubDate>
		<description>
				தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
				தேவன் கூறுகிறார்: “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
				பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். ஆனால் நான் அதைத்திடமாக இருக்கச் செய்வேன்”.
				“சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
				ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
				ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை எதுவும் இப்பூமியில் இல்லை.
				தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
				தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
				நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
				கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
		</description>
	</item>
</channel>
</rss>