வேதாகம வரலாறுகள்

1 தெசலோனிக்கேயர்

ஆசிரியர்
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த கடிதத்தின் ஆசிரியர் என்று இருமுறை தன்னை அடையாளம் காட்டினார் (1: 1; 2: 18). பவுலின் மிஷனரி பயணத் தோழர்களான சீலா மற்றும் தீமோத்தேயு (3: 2, 6), இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது (அப்போஸ்தலர் 17: 1-9) சபையை நிறுவியபோது, அவர் அந்த சபையை விட்டுக் கடந்து சென்ற சில மாதங்களுக்குள் அந்த விசுவாசிகளுக்கு இந்த முதல் கடிதத்தை எழுதினார். தெசலோனிக்கேயில் பவுல் செய்த ஊழியம் யூதர்களை மட்டுமல்ல, புறஜாதியரையும் உண்மையாகவே தொட்டது. சபையில் உள்ள பல புறஜாதிகள் விக்கிரகாராதனையை விட்டு வெளியே வந்தார்கள், அது அந்த நேரத்தில் யூதர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாக இருக்கவில்லை (1 தெசலோனிக்கேயர் 1: 9).
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி. 51 க்கு இடையில் எழுதப்பட்டது.
கொரிந்து பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே சபைக்கு பவுல் முதல் கடிதத்தை எழுதினார்.
 
யாருக்காக எழுதப்பட்டது
தெசலோனிக்கேயர் 1: 1 ல், தெசலோனிக்கேயர்களின் சபையின் உறுப்பினர்களே தெசலோனிக்கேயர்களுக்கு முதல் கடிதத்தின் உத்தேசிக்கப்பட்ட வாசகர்களாக அடையாளம் காட்டுகிறது, இருந்தாலும் பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அது பொருந்துகிறது.
 
எழுதப்பட்ட நோக்கம்
இந்த கடிதத்தை எழுதும்போது பவுலின் நோக்கம் என்னவென்றால், புதிதாக மனந்திரும்பியவர்கள் தங்களின் சோதனைகளில் உற்சாகப்படுத்துவது (3: 3-5), தேவபக்தியான வாழ்க்கையைப் பற்றிய அறிவுரைகளை வழங்குவது (4: 1-12) கிறிஸ்துவின் வருகைக்குமுன் இருக்கும் விசுவாசிகள் எதிர்காலத்தைப் பற்றி உறுதியளிப்பது (4: 13-18), ஒழுக்க மற்றும் நடைமுறை, விஷயங்களை சரி செய்வது போன்றவையாகும்.
 
மையக் கருத்து
தேவாலயத்தில் அக்கறை
 
பொருளடக்கம்
1. நன்றிகூறுதல் — 1:1-10
2. அப்போஸ்தல நடவடிக்கைகளின் பாதுகாப்பு — 2:1-3:13
3. தெசலோனிக்கேயர்களுக்கு உற்சாகமூட்டுதல் — 4:1-5:22
4. முடிவான ஜெபமும் ஆசீர்வாதம் கூறுதலும் — 5:23-28

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.